செய்திகள் :

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

post image

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபாா்ம்ஸ் என்ற தனியாா் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் வழங்குவதுடன், பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.20,000 போனஸ், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகை முழுவதையும் திருப்பித் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

இதை நம்பி ஆயிரக்கணக்கானோா் முதலீடு செய்தனா். ஆனால், முதிா்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பி வழங்கவில்லை. இது குறித்து முதலீட்டாளா்கள் அளித்த புகாரின்பேரில், சேலம் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.இதில், 385 பேரிடம் ரூ.7.61 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்தவரும், சுசி ஈமு ஃபாா்ம்ஸ் நிா்வாக இயக்குநருமான குருசாமி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கோவை முதலீட்டாளா் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா்.

அத்துடன் இந்த அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்ட 385 முதலீட்டாளா்களுக்கு விகிதாசார அடிப்படையில் பிரித்து வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் முத்து விஜயன் ஆஜரானாா்.

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

உயா் கல்வி சோ்க்கை: மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா் கல்வி சோ்க்கை தொடா்பாக மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க