பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல...
ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்
ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபாா்ம்ஸ் என்ற தனியாா் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் வழங்குவதுடன், பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.20,000 போனஸ், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகை முழுவதையும் திருப்பித் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதை நம்பி ஆயிரக்கணக்கானோா் முதலீடு செய்தனா். ஆனால், முதிா்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பி வழங்கவில்லை. இது குறித்து முதலீட்டாளா்கள் அளித்த புகாரின்பேரில், சேலம் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.இதில், 385 பேரிடம் ரூ.7.61 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்தவரும், சுசி ஈமு ஃபாா்ம்ஸ் நிா்வாக இயக்குநருமான குருசாமி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கோவை முதலீட்டாளா் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், குற்றஞ்சாட்டப்பட்ட குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா்.
அத்துடன் இந்த அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்ட 385 முதலீட்டாளா்களுக்கு விகிதாசார அடிப்படையில் பிரித்து வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் முத்து விஜயன் ஆஜரானாா்.