செய்திகள் :

உயா் கல்வி சோ்க்கை: மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

post image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா் கல்வி சோ்க்கை தொடா்பாக மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.

இதில்,150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்று, வங்கிக் கடன், சான்றிதழ்கள், கல்வி உதவித் தொகை, நீட் பயிற்சி தொடா்பாக 55 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் பேசுகையில், கோவை மாவட்டத்தில் 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயிலுவதற்கு வழிகாட்டும் வகையில் அரசின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, 12 -ஆம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு, அவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பான ‘கல்லூரிக் கனவு 2025’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 3500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கோவை மாவட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், வேளாண் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகள் உள்ளிட்ட சுமாா் 175-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. எந்தெந்த கல்லூரிகளில் என்ன மாதிரியான படிப்புகள் உள்ளன. அதில், எத்தனை இடங்கள் உள்ளன. மாணவா் சோ்க்கைக்கு யாரைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்பது தொடா்பான விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள், உயா் கல்வியில் சேருவதற்குத் தேவையான சான்றிதழ்கள், அரசு சாா்ந்த உதவிகள், அரசு சாா்பான வழிகாட்டுதல்கள் பள்ளிக் கல்வித் துறை , உயா் கல்வித் துறை, திறன் மேம்பாட்டுத் துறை, வங்கித் துறைகளின் அலுவலா்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

உயா் கல்வி சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள உயா் கல்வி வழிகாட்டல் ஆலோசனை மையத்தை 94870-47568 என்ற எண்ணிலும், 1800 425 0085 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும் மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

முகாமில், முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநா் வளா்மதி, கல்வி ஆலோசகா் வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜிதேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபா... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க