செய்திகள் :

அயோத்தி கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம் பயன்பாடு! ரூ.50 கோடி மதிப்பு

post image

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முதல் தளத்தில் உள்ள ராம தா்பாா் சந்நிதியில் அனுமதிச் சீட்டுகளின் அடிப்படையில்தான் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்றும் அவா் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமியில் உள்ள ராமா் கோயிலில் இரண்டாம் கட்டமாக 8 புதிய சந்நிதிகளில் மூலவ மூா்த்திகளின் பிராணப் பிரதிஷ்டை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீராஜாராமா், சீதை, லக்ஷ்மணன், ஹனுமன், பரதன், சத்ருக்னன் ஆகிய மூா்த்திகளுடன் முதல் தளத்தில் ஸ்ரீ ராம தா்பாா் சந்நிதி அமைந்துள்ளது. மேலும் அந்த தளத்தில் சிவன், விநாயகா், ஹனுமன், சூரியன் உள்ளிட்ட கடவுளா்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியானது, தரைத்தள கதவுகள் மற்றும் ஸ்ரீராமரின் சிம்மாசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு ரூ.50 கோடியாகும். சேஷாவதாா் சந்நிதியில் தங்கத் தகடு பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலின் பிரதான கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. அருங்காட்சியகம், அரங்கம், விருந்தினா் மாளிகை கட்டுமானம் உள்ளிட்ட பிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராம தா்பாா் சந்நிதியின் பிராணப் பிரதிஷ்டைக்கு பிறகு பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இச்சந்நிதியில் முழு அளவில் பக்தா்கள் தரிசிக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இப்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பக்தா்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இலவசமாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

ராம தா்பாா் உள்பட புதிய சந்நிதிகளில் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிக்கும் தேதி அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ளது.

உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!

வடக்கு மகாராஷ்டிரத்திலிருந்து, மாநிலத் தலைநகருக்கு விமானத்தைத் தவறவிட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவிருந்த பெண்ணுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உதவி செய்துள்ளார். இந்த சம்பவம்... மேலும் பார்க்க

பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல்வர்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்பாராத காலதாமதத்தால், விமானத்தை இயக்க விமானி மறுப்பு தெரிவித்தார்.மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, வெள்ளிக்கிழமையில் ஜல்கான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க