செய்திகள் :

`அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பினால், சொத்து வரி ரத்து' - மகாராஷ்டிரா கிராமத்தில் புது திட்டம்

post image

கிராமங்களுக்கு வருவாய் கொடுப்பதில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த சொத்து வரியை வசூலிக்க பஞ்சாயத்து ஊழியர்கள் போராடுவதுண்டு. அதே போன்று கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை படிக்க அனுப்புவதும் வெகுவாக குறைந்து இருக்கிறது. அதிகமான பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆங்கில வழி தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிராவில் நான்கு கிராம பஞ்சாயத்துகளின் நிர்வாகங்கள், இப்பிரச்னைக்கு புதிய தீர்வு கண்டுள்ளன. இதன்படி புல்தானா மாவட்டத்தில் உள்ள பட்காவ், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிகாலி, பாலேகுல், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவாலே ஆகிய கிராமங்களில் செயல்படும் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி

இதன் படி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் பெற்றோரின் சொத்து வரி ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இத்திட்டத்தை பட்காவ் பஞ்சாயத்துதான் தொடங்கி வைத்தது. அதனை தொடர்ந்து மற்ற பஞ்சாயத்துகள் இதனை செயல்படுத்த ஆரம்பித்தன.

இது குறித்து பட்காவ் பஞ்சாயத்து தலைவர் அனுஷ்யா கூறுகையில்,'' எங்களது கிராமத்தில் உள்ள 7வது வகுப்பு வரையிலான பள்ளியில் வெறும் 29 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதே நிலை நீடித்தால் அரசு பள்ளியை மூடவேண்டிய நிலை வரும். இதனால் ஏழை மாணவர்களால் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலை ஏற்படும்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோரின் சொத்து வரி, தண்ணீர் வரியை ரத்து செய்ய பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இப்போது அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது'' என்றார்.

சிகாலி கிராம பஞ்சாயத்து தலைவர் ரோஹித் பவார் இது குறித்து கூறுகையில்,''எங்களது கிராமத்தில் 4 தனியார் பள்ளிகள் இருக்கிறது. இதனால் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளின் பெற்றோரின் சொத்து வரியை முழுமையாக ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார். இதனால் இக்கிராமத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறார்கள்.

JEE: முதன்முறையாக ஐஐடியில் படிக்கத் தகுதிபெற்ற பழங்குடி மாணவி; இந்தியளவில் சாதனை படைத்த கதை!

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது தந்தை ஆண்டி.கடந்த 2023 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தாய் கவிதா கூலித்தொழில் செய்து வருகிறார... மேலும் பார்க்க

ஐஐடி தகுதித் தேர்வில் கல்வராயன் மலை பழங்குடி மாணவி சாதனை - முழு கல்விச் செலவையும் ஏற்கும் தமிழக அரசு

கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஐஐடி தகுதித் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்ட் 2025 (JEE Advance 2025) தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் 417-வது இடம்பிடித்து சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க

கேரளா: "அங்கன்வாடியில் உப்புமாவுக்குப் பதில் முட்டை பிரியாணி" - சிறுவன் கோரிக்கையை ஏற்ற அரசு

கேரளாவைச் சேர்ந்த சங்கு என்ற சிறுவன் அங்கன்வாடிகளில் பிரியாணி வழங்க வேண்டும் எனப் பேசும் வீடியோ ஒன்று கடந்த ஆண்டு வைரலானது.கேரள பெண்கள், குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அப்போது அதற்குப... மேலும் பார்க்க

ஊட்டி: ``அட்மிஷன் போட்டால் ரூ.5000 டெபாசிட்!'' - அரசுப் பள்ளியில் அடேங்கப்பா பிளான்!

கோடை விடுமுறை நிறைவடைந்திருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நேற்றிலிருந்து தொடங்கியிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீள... மேலும் பார்க்க