செய்திகள் :

கோவையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: உ.பி.யைச் சேர்ந்தவர் கைது

post image

கோவையில் வாகன தணிக்கையின்போது 21 கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

கோவையில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளில் எடுத்து வந்ததன் பேரில் தற்போது போதைப் பொருள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணன் சுந்தர் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர் தெற்கு உதயகுமார் மற்றும் குனியமுத்தூர் காவல் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செல்வபுரம் ஆய்வாளர் அழகுராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தெலுங்கு பாளையம் வேடப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது?

அப்போது அந்த வழியாக டிஎன்66 பி 5423 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அமன்சிங் என்பதும், அவர் இரு சக்கர வாகனத்தில் சாக்கு பையில் அரசால் தடை செய்யப்பட்ட மன மயக்கம் , உடலுக்கு ஊறு விளைவிக்கும் சுமார் 21 கிலோ கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.26,000, டிஜிட்டல் எடை இயந்திரம் 2, கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கரோனா: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எ... மேலும் பார்க்க

டிரம்ப் - மஸ்க் இடையே முற்றும் மோதல்: செய்திகள் நேரலை!

ரெப்போ வட்டி குறைவுரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமானது.ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் 0.25 சதவிகித... மேலும் பார்க்க

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவி!

வாழப்பாடி: ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிற... மேலும் பார்க்க

ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வு

புதுதில்லி: ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக 2026 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் பொருளாதார-சமூக கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. பொருளாதா... மேலும் பார்க்க

2026 நவம்பர் முதல் சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் புதிய பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்றும் இத்தகைய எரிபொருளில் இயங்காத பிற பேரு... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாள்களில் பவுன... மேலும் பார்க்க