செய்திகள் :

ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வு

post image

புதுதில்லி: ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக 2026 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் பொருளாதார-சமூக கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.

சா்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. சாா்பில் நடைபெறும் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதையும் கவுன்சில் கண்காணிக்கும்.

ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற முடியும். பிராந்திய ரீதியாக நாடுகள் 3 ஆண்டு காலத்துக்குத் தோ்ந்தெடுக்கப்படும்.

ரசிகர்கள் பாதுகாப்பே முக்கியம்: ஆர்.சி.பி. நிர்வாகம் வருத்தம்

ஆசிய கண்டத்தில் இருந்து 11 நாடுகளும், ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் இருந்து 6 நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்படும்.

இந்நிலையில், 2026-28 ஆண்டுக்கான ஐ.நா. பொருளாதார- சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பதவி காலம் இருக்கும். கடைசியாக 2008 முதல் 2020 வரை 4 முறை இந்த கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது. தற்போது 18 ஆவது முறையாக இந்த கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.

‘இந்தியா மீது மிகுந்த ஆதரவையும் நம்பிக்கை வைத்து வாக்களித்த ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், வளர்ச்சி பிரச்னைகளை முன்னெடுப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்றும், ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலை பலப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என சமூக வலைதள பதிவு ஒன்றில் உறுதியளித்துள்ளார்.

பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகள் தொடர்பான கொள்கைகளை பரிந்துரைப்பதில் ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய அமைப்பாக கருதப்படுகிறது.

கரோனா: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எ... மேலும் பார்க்க

டிரம்ப் - மஸ்க் இடையே முற்றும் மோதல்: செய்திகள் நேரலை!

ரெப்போ வட்டி குறைவுரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமானது.ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் 0.25 சதவிகித... மேலும் பார்க்க

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவி!

வாழப்பாடி: ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிற... மேலும் பார்க்க

கோவையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: உ.பி.யைச் சேர்ந்தவர் கைது

கோவையில் வாகன தணிக்கையின்போது 21 கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். கோவையில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளில் எடுத்து... மேலும் பார்க்க

2026 நவம்பர் முதல் சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் புதிய பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்றும் இத்தகைய எரிபொருளில் இயங்காத பிற பேரு... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாள்களில் பவுன... மேலும் பார்க்க