செய்திகள் :

ஈமு கோழி மோசடி - சுசி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை.. ரூ.7 கோடி அபராதம்

post image

கொங்கு மண்டலத்தை டிஸைன் டிஸைனாக ஏமாற்றிய மோசடிகளில் ஈமு கோழி மோசடி முக்கியமானது.  ஈமு கோழிக்கும், இந்தியாவுக்கும் சம்பந்தமே இல்லை. ஈமு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு வகை பறவை இனமாகும்.

ஈமு கோழி மோசடி

அதை வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கடந்த 2010-11 காலகட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான நிறுவனங்கள் முளைத்தன. அதில் கொங்கு மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதலீடு செய்தனர்.

மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட முதலீடு செய்தனர். இதில் சுசி என்கிற நிறுவனம் திரை பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்து, ஆயிரக்கணக்கான முதலீடுகளை ஈர்த்தது. ஒவ்வொருவரும் அந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடும் செய்தனர்.

குருசாமி

ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமி மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் குறித்த விசாரணை கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் (டான்பிட்) நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 385 பேர் மோசடி செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி சுசி நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பு

குருசாமி ஏற்கனவே சிறையில் தான் உள்ளார். இதேபோல கடந்த ஜனவரி மாதம் மற்றொரு வழக்கில் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.19 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

LGBTQ+ தம்பதிகள் 'திருமணம் இல்லாமல்' குடும்பத்தை உருவாக்க முடியும்- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் குடும்பமாக வாழ முடியும் எனத் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தன்பாலின ஈர்ப்பாளரான பெண் ஒருவர... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டு: `மாநில அரசின் விதிமுறைகள் செல்லும்’ - வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார்... மேலும் பார்க்க

``இனி யார் அந்த சார்? என்று கேட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு'' -அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்வது என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மே 28 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் என்று... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: `ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை' - நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மே 28ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் என்ற... மேலும் பார்க்க

'பணமதிப்பிழப்பு முதல் பில்கிஸ் பானு தீர்ப்பு வரை' - முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பி.வி. நாகரத்னா

உச்ச நீதிமன்றத்தின் ஐந்தாவது மூத்த நீதிபதியான நீதிபதி நாகரத்னா, அக்டோபர் 29, 2027 அன்று பணி ஓய்வு பெறும் வரை, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களைப் பரிந்துரைத்தவாறு கொலீஜியத்தில் உறுப்பினராக நீ... மேலும் பார்க்க

`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சமூக வலைதள பிரபலத்தின் மீது துணிக்கடை நடத்தும் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.ஆப்பிள் ஐபோன்கடந்த, 2021ம் ஆண்டு சமூக வலைதளம் வாயிலாக, அறிமுகமான அந்த பிரபலத்தி... மேலும் பார்க்க