செய்திகள் :

'பணமதிப்பிழப்பு முதல் பில்கிஸ் பானு தீர்ப்பு வரை' - முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பி.வி. நாகரத்னா

post image

ச்ச நீதிமன்றத்தின் ஐந்தாவது மூத்த நீதிபதியான நீதிபதி நாகரத்னா, அக்டோபர் 29, 2027 அன்று பணி ஓய்வு பெறும் வரை, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களைப் பரிந்துரைத்தவாறு கொலீஜியத்தில் உறுப்பினராக நீடிப்பதோடு, செப்டம்பர் 23, 2027 அன்று, இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார்.

தற்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில், தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய், நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி ஜே.கே மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய ஐவர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நீதிபதி நாகரத்னா
நீதிபதி நாகரத்னா

உச்ச நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காகவும், பல உயர் நீதிமன்றங்கள் சார்ந்த முக்கியமான நியமனங்களை மேற்கொள்வதற்காகவும், தலைமை நீதிபதி கவாய் திங்களன்று தனது முதல் கொலீஜியம் கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொலீஜியம் முறைப்படி, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்தல், இடமாற்றம் செய்தல் மற்றும் நீதிபதிகளின் பதவி உயர்வு ஆகியவை குறித்துப் பரிந்துரை செய்வர்.

1993-ம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, கொலீஜியம் அமைப்பு நடைமுறையில் உள்ளது.

அக்டோபர் 30, 1962-ல் பிறந்த நீதிபதி பி.வி. நாகரத்னா, முன்னாள் தலைமை நீதிபதி வெங்கட்ராமையாவின் புதல்வியாவார். 1987-ல் நாகரத்னா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.

அக்டோபர் 28, 1987-ல், பெங்களூருவில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். சேவைச் சட்டம், வணிகம், காப்பீடு சார்ந்த வழக்குகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளில் கவனம் செலுத்தினார்.

2008, பிப்ரவரி 18 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நாகரத்னா. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 17, 2017 அன்று நிரந்தர நீதிபதியானார்.

2021-ல் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். தற்போது, பெங்களூரு சமரச மையம் மற்றும் கர்நாடக நீதித்துறை அகாடமியின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.

2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர்!

துணிச்சலான தீர்ப்புகளுக்குச் சொந்தக்காரரான நீதிபதி நாகரத்னா, பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்தவர்.

2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என அவர் வாதிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சமூக வலைதள பிரபலத்தின் மீது துணிக்கடை நடத்தும் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.ஆப்பிள் ஐபோன்கடந்த, 2021ம் ஆண்டு சமூக வலைதளம் வாயிலாக, அறிமுகமான அந்த பிரபலத்தி... மேலும் பார்க்க

`குறைந்தபட்ச தண்டனை கொடுங்கன்னு ஞானசேகரன் கதறி அழுதார், ஆனா..!' - அரசு தரப்பு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என இன்று(மே 28) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மே... மேலும் பார்க்க

`கருணை காட்ட வேண்டும்’ எனக் கேட்ட ஞானசேகரன் - அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் தீர்ப்பு விவரங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24ம் தேதி புகார் அளித்தார்.... மேலும் பார்க்க

`அரிதிலும் அரிதான வழக்கு’ அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் க... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டம்: `மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது’ - நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

சூதாட்டத்துக்கு வித்திடும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய செயலிகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனு... மேலும் பார்க்க

தாயார் இறந்த மறுநாளே சட்ட பணி; 11 வழக்குகளில் தீர்ப்பு கூறிவிட்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் அபய் எஸ் ஓகா. கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 22 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய அபய் ஓகா பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்... மேலும் பார்க்க