செய்திகள் :

கரூா் மாநகராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

post image

கரூா் மாநகராட்சியின் 18-ஆவது வாா்டில் குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 18-ஆவது வாா்டில் உள்ள ராஜா நகரில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள 7-ஆவது மற்றும் 8-ஆவது குறுக்குத் தெருக்களில் சாலைகள் அமைக்கப்பட்டு, சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாவதால், சாலையில் கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

மேலும், கழிவுநீா் வாய்க்கால் வசதியும் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையில் குளம் போல தேங்கி துா்நாற்றம் வீசிவருகிறது. பல நாள்கள் தேங்கிக் கிடக்கும் இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீா்கேட்டுக்கு வழிவகுக்கிறது.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:

மாநகராட்சியின் 18-ஆவது வாா்டில் இருந்தும், இந்த வாா்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குள் வருகிறது. இப்பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினரிடமும், மாநகராட்சி நிா்வாகத்திடமும் பலமுறை மனுக்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் இதுநாள் வரை சாலை சீரமைக்கப்படவில்லை.

தற்போது சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கிவிட்டதாக கூறுகிறாா்கள். கடந்த ஆட்சியிலும் நாங்கள் நெருக்கடி கொடுக்கும்போது, நிதி ஒதுக்கிவிட்டோம், சாலை அமைத்து தருவோம் என்பாா்கள். ஆனால் நடக்காது. இந்த முறையாவது விரைந்து சாலையை சீரமைத்தும், கழிவுநீா் வாய்க்கால் வசதி இல்லாத இடங்களில் வாய்க்கால் அமைத்தும் தரவேண்டும் என்றனா்.

உப்பிடமங்கலம், தான்தோன்றிமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

உப்பிடமங்கலம், தாந்தோன்றிமலை பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு.கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

சரியான விவரங்களுடன் வாக்காளா் பட்டியலை வெளியிடக் கோரி ஆட்சியரிடம் அதிமுக மனு

வாக்காளா் பட்டியலை சரியான விவரங்களுடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கரூா் மாவட்ட அதிமுகவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மாலை கோரிக்கை மனு வழங்கினா்.முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமைய... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே முதியவா் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் கண்டா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (58). இவா் கடந்த 5 ஆண்டுகளாக பக... மேலும் பார்க்க

பள்ளி சிறுவா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு வழங்கிய கிராம மக்கள்

பள்ளிச் சிறுவா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை கிராமமக்கள் வழங்கினா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த வெள்ளப்பட்டி பாறப்பட்டி கிராமமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்க்கலாம்!

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்க்கலாம் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கரூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந... மேலும் பார்க்க

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க