செய்திகள் :

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

post image

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி, அங்கு அனைத்துக் கட்சிகளும் படுதீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், பாஜகவினர் ஆபரேஷன் சிந்தூர் பெயரில் மக்களிடம் வாக்கு சேகரிப்பதாக பரவலாக பேசப்படுவது குறித்து முதல்வர் பகவந்த் மானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய பகவந்த் மான் கூறியிருப்பதாவது: ”ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பாஜக வாக்கு சேகரிக்கிறது. இவர்கள்(பாஜக) ‘சிந்தூரை(நெற்றியில் இடும் திலகம்)’ கேலிக்குரியதொரு விஷயமாக மாற்றியுள்ளனர்.

ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் சிந்தூரத்தை அனுப்பி வைக்கின்றனர். பிரதமர் மோடியின் பெயரால் நீங்கள் உங்கள் நெற்றியில் திலகமிட்டுக் கொள்வீர்களா?

இது என்ன ‘ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா?’” என்று விமர்சித்துள்ளார்.

பகவந்த் மான் தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ”பகவந்த் மான் வரம்ம்புகளை மீறி பேசியிருக்கிறார். அவருக்கு பொறுப்புணர்வு துளியளவும் இல்லை. இந்திய ராணுவத்தை அவர் விமர்சித்திருக்கிறார். புனிதமானதாக கருதப்படும் சிந்தூரத்தையும் கொச்சைப்படுத்திவிட்டார். தேச நலனுக்கு எதிரான உணர்வை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையடுத்து அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று எதிர்வினையாற்றப்பட்டுள்ளது.

மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை!!

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட... மேலும் பார்க்க

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க

பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35,000 பேர்தான் கூட முடியும்! ஆனால் கூடியதோ..

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35 பேர்தான் கூட முடியும் என்ற நிலையில், சுமார் 3 லட்சம் பேர் அரங்குக்குள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே வர முயன்றதே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என கூறப்படு... மேலும் பார்க்க

அல்லு அர்ஜுன் போல சித்தராமையா, சிவக்குமார் கைது செய்யப்படுவார்களா? பாஜக கேள்வி

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா செய்வாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எங்கே ஒளிந்திருக்கிறார் என்றும் செ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 564 பேருக்கு கரோனா உறுதி! 7 பேர் பலி!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 564 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் தில்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுலிடம் இல்லை: பாஜக விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுல் காந்தியிடம் இல்லை என்று பாஜக விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்ப... மேலும் பார்க்க