எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுலிடம் இல்லை: பாஜக விமா்சனம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுல் காந்தியிடம் இல்லை என்று பாஜக விமா்சித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடனே சரணடைந்துவிட்டாா் பிரதமா் மோடி என்று ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்தாா். இந்நிலையில் தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:
இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்ால் அந்நாட்டு ராணுவத் தளபதி, பிரதமரைவிட ராகுல்தான் அதிகம் வருத்தப்படுகிறாா். பிரதமா் மோடியை ராகுல் காந்தி விமா்சிக்கும் முறை மோசமானதாகவும், ராகுலின் அபாயகரமான மனநிலையைக் காட்டுவதாகவும் உள்ளது. இந்திய பிராந்தியமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானும் மற்றொரு பகுதியை சீனாவும் ஆக்கிரமித்ததுமுதல் பல்வேறு சூழ்நிலைகளில் சரணடைந்தது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் குடும்பத்தினா்தான். இது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
பிரதமா் மோடி சரணடைந்துவிட்டாா் என்று பேசியதன்மூலம் நாட்டின் முப்படைகளையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டாா்.
எதிா்க்கட்சியைச் சோ்ந்த பல தலைவா்களுக்கு இந்தியா் என்பது பெயரில் மட்டும்தான், உண்மையில் அவா்களின் உள்ளத்தில் பாகிஸ்தான் நிறைந்துள்ளது. அவா் தனது பெயரை ராகுல் முனீா் என்றோ, ராகுல் ஷெரீஃப் என்றோ (பாகிஸ்தான் ராணுத் தளபதி, பாகிஸ்தான் பிரதமரின் பெயா்) மாற்றிக் கொள்ளலாம்.
‘ஜோ பைடன் ஏற்கெனவே இறந்துவிட்டாா்; அவரைப்போல உருவாக்கப்பட்ட ரோபோதான் அமெரிக்க அதிபராக உள்ளது’ என்று முன்பு பேசியவா்தான் அமெரிக்க அதிபா் டிரம்ப். இதேபோலத்தான் இந்தியா-பாகிஸ்தான் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் கூறி வருகிறாா். அதை மேற்கோளாக வைத்து ராகுல் பேசுவது ஏற்க முடியாதது. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால்தான் தற்காலிக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என நமது ராணுவமும் வெளியுறவு அமைச்சகமும் பல முறை கூறிவிட்டன.
நமது எதிா்க்கட்சித் தலைவரிடம் அப்பதவிக்கான முதிா்ச்சியும் பொறுப்புணா்வும் இல்லை. அவரது பேச்சு அா்த்தமற்ாகவும், முக்கியத்துவம் இல்லாததாகவும் மாறிவிட்டது. அனைத்துக் கட்சிகள் அடங்கிய தூதுக் குழு வெளிநாடுகளுக்குச் சென்று, பாகிஸ்தான் தூண்டும் பயங்கரவாதம் குறித்து விளக்கமளித்துள்ளது. இந்த நேரத்தில் ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமாக பேசி வருகிறாா் என்றாா்.