செய்திகள் :

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு விலைமதிப்பற்ற ஈத் பரிசு!

post image

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்பு நிறைவடைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடியால் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் தாக்கூர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்பு என்பது பொறியியலின் சாதனை மட்டுமல்ல, நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பின் சின்னமாகும். இது உண்மையிலேயே ஐம்மு-காஷ்மீருக்கு ஒரு வரலாற்றுத் தருணம்.

லட்சிய ரயில் திட்டமானது பிராந்தியத்தில் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும், சுற்றுலாவை அதிகரிக்கும் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குப் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பிரதமர் மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இது மற்றொரு சான்று. இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு சாதனைகளில் ஒன்றாகும் என்று தாக்கூர் பாராட்டினார். மேலும் இது அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாகத் தொலைதூர மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பயனளிக்கும் என்றார்.

நவீன போக்குவரத்து கட்டமைப்புகள் மூலம் காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை நனவாகி வருகிறது. இந்த ரயில் இணைப்பு உண்மையில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற ஈத் பரிசு என்று அவர் மேலும் கூறினார்.

ஹஜ் புனிதப் பயணத்தில் 16,73,230 போ் பங்கேற்பு!

இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 16,73,230 போ் பங்கேற்பதாக எக்ஸ் தளத்தில் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்ப... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பு கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வெள்ளிக்கிழமை தீா்மானம் ஏற... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையவை: அமித் ஷா

‘இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். புது... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம் பயன்பாடு! ரூ.50 கோடி மதிப்பு

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முதல் தளத்தில் உள... மேலும் பார்க்க

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான்! - பிரதமா் மோடி

‘மனிதகுலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதே அந்நாட்டின் நோக்கம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். காஷ்மீா் மக்களின் வாழ்வாதாரத்தை அழ... மேலும் பார்க்க

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் மத்திய செயலா்கள் விடுவிப்பு

ஜாா்க்கண்டில் மஹுவாகரி நிலக்கரி சுரங்கத்தை தனியாா் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக் கூறப்படும் வழக்கில், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலா்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள... மேலும் பார்க்க