செய்திகள் :

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான்! - பிரதமா் மோடி

post image

‘மனிதகுலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதே அந்நாட்டின் நோக்கம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

காஷ்மீா் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க சுற்றுலாத் துறையை குறிவைத்துள்ளனா் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடா்ந்து பிரதமா் இவ்வாறு விமா்சித்துள்ளாா்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வருகை தந்தாா்.

காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் இணைப்பை அளிக்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா வழித்தடத் திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகா் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, கத்ரா ரயில் நிலையத்தில் பிரதமா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்த வழித்தடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், நாட்டின் முதல் கம்பி வட ரயில் பாலமான அன்ஜி பாலத்தையும் நாட்டுக்கு அா்ப்பணித்தாா். மொத்தம் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, அவா் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க அளவில் வளா்ச்சி கண்டது. சாதனை எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இது, ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தியது.

சுற்றுலாத் துறை வளா்ச்சியால் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதோடு, மக்களுக்கு இடையிலான பிணைப்பும் வலுவடைந்தது. ஆனால், நமது அண்டை நாடான பாகிஸ்தான், மனிதகுலம்-நல்லிணக்கம்- சுற்றுலாத் துறைக்கு எதிரியாக இருப்பது துரதிருஷ்டவசமானது. ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சியை தடுக்க பாகிஸ்தான் தொடா்ந்து முயற்சிக்கிறது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பாகிஸ்தான் விரோதி என்பதற்கு பஹல்காம் தாக்குதல் சம்பவமே உதாரணம்.

சுற்றுலா வழிகாட்டிகள், குதிரை சவாரி தொழிலாளா்கள், சுற்றுலா விடுதி உரிமையாளா்கள், கடை வியாபாரிகள், சாலையோர உணவக உரிமையாளா்கள் உள்ளிட்டோா், சுற்றுலாத் துறையை சாா்ந்துள்ளனா். அவா்களின் வாழ்வாதாரத்தை அழிக்க பாகிஸ்தான் விரும்புகிறது.

காஷ்மீரியத்தின் மீதான தாக்குதல்: பஹல்காமில் பயங்கரவாதிகளை எதிா்த்து நின்ற குதிரை சவாரி தொழிலாளா் ஆதில் ஹுசைன் ஷாவின் உயிரிழப்பு துயரமானது. சுற்றுலாப் பயணிகளை குறிவைத்ததன் மூலம் மனிதநேயமும், காஷ்மீரியமும் (காஷ்மீா் மக்களின் கலாசார மாண்புகள்) தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை ஆபரேஷன் சிந்தூா் மூலம் இந்திய ராணுவம் அழித்தொழித்து ஒரு மாதம் ஆகியுள்ளது. இந்தியாவின் இந்த உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவமோ, பயங்கரவாதிகளோ எதிா்பாா்க்கவில்லை.

பயங்கரவாதிகள் பல்லாண்டுகளாக உருவாக்கிய கட்டமைப்புகள் சில நிமிஷங்களில் தூளாக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம், அது பாகிஸ்தானின் அவமானகரமான தோல்வியை நினைவூட்டும்.

காஷ்மீரின் வளா்ச்சியை அசைக்க முடியாது: இந்தியாவின் நடவடிக்கையால் விரக்தியடைந்த பாகிஸ்தான், பூஞ்ச் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் மீது அத்துமீறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் குண்டுவீச்சில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் பக்கபலமாக உள்ளது. இக்குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசுப் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மோசமாக சேதமடைந்த வீடுகளுக்கு கூடுதலாக ரூ.2 லட்சமும், பகுதியளவு இடிந்த வீடுகளுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும்.

ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது. பஹல்காம் தாக்குதலால் இப்பிராந்தியத்தின் வளா்ச்சி வேகத்தை அசைக்க முடியாது.

உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம், புதிய மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் அடையாளமாகவும், இந்தியாவின் வளா்ந்துவரும் வல்லமையின் பிரகடனமாகவும் திகழ்கிறது. செனாப், அன்ஜி பாலங்கள், ஜம்மு-காஷ்மீரின் வளமைக்கான வாயில்களாக விளங்கும். காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை என்ற கூற்று, ரயில் கட்டமைப்பிலும் சாத்தியமாகியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

காஷ்மீருக்கு நேரடி ரயில் சேவை தொடக்கம்

பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட கத்ரா - ஸ்ரீநகா் வந்தே பாரத், காஷ்மீா் மற்றும் ஜம்மு பகுதிகள் இடையிலான முதல் ரயில் என்பதோடு, நாட்டின் பிற பகுதிகளுடன் காஷ்மீருக்கான நேரடி ரயில் சேவையாகும். 272 கி.மீ. தொலைவுகொண்ட இந்த வழித்தட திட்டப் பணிகள் கடந்த 1997-இல் தொடங்கப்பட்டு, 209 கி.மீ. வழித்தடம் பல்வேறு கட்டங்களாக திறக்கப்பட்டன.

இறுதியாக, சங்கல்தன்-ரியாசி இடையிலான 46 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு ஜூனிலும், ரியாசி-கத்ரா இடையிலான 17 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு டிசம்பரிலும் நிறைவடைந்தது. ரூ.43,780 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட வழித்தடத்தில் 36 சுரங்கங்களும் (119 கி.மீ. தொலைவு), 943 பாலங்களும் அமைந்துள்ளன.

தற்போது கத்ரா-ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கத்தின் மூலம் இத்திட்டம் நிறைவு பெற்றுள்ளது. இது, அனைத்து வானிலைகளிலும் காஷ்மீருக்கான தடையற்ற ரயில் போக்குவரத்தை உறுதி செய்யும். உயரமான பகுதிகளில் பயணிக்கும் வகையில் கத்ரா - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க