செய்திகள் :

ஹஜ் புனிதப் பயணத்தில் 16,73,230 போ் பங்கேற்பு!

post image

இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 16,73,230 போ் பங்கேற்பதாக எக்ஸ் தளத்தில் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஹஜ் பயணத்தில் பங்கேற்பவா்களில் பெரும்பாலானவா்கள் வெளிநாட்டினா். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமாா் 1.6 லட்சம் குறைவு. கரோனா நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியிருந்தது. 2012-ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை 31.6 லட்சத்திற்கும் மேல் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது.

கரோனா பரவல் காலகட்டத்தில் (2020-2022) சவூதி அரேபியா ஹஜ் பயணிகள் வரவை வெகுவாகக் கட்டுப்படுத்தியது. மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே புனிதப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் எண்ணிக்கை 30 ஆண்டுகால குறைந்தபட்சமாகும்.

உலகளாவிய பணவீக்கம், பொருளாதார நெருக்கடிகள், அதீத வெப்பநிலை, கடுமையான நுழைவு விதிமுறைகள் ஆகியவை ஹஜ் பயணத்துக்காக இந்த ஆண்டு சவூதி அரேபியா சென்றவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!

வடக்கு மகாராஷ்டிரத்திலிருந்து, மாநிலத் தலைநகருக்கு விமானத்தைத் தவறவிட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவிருந்த பெண்ணுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உதவி செய்துள்ளார். இந்த சம்பவம்... மேலும் பார்க்க

பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல்வர்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்பாராத காலதாமதத்தால், விமானத்தை இயக்க விமானி மறுப்பு தெரிவித்தார்.மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, வெள்ளிக்கிழமையில் ஜல்கான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க