செய்திகள் :

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

post image

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது.

நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே நீண்ட காலமாக நட்பு இருந்து வந்தது. 2024 அமெரிக்க அதிபா் தோ்தலில் டிரம்புக்கு எலான் மஸ்க் தீவிர ஆதரவு அளித்தாா்.

டிரம்ப்பின் தோ்தல் பிரசாரங்களில் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ் தளம் முக்கிய பங்கு வகித்தது. மேலும், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி டிரம்புக்கு ஆதரவான கருத்துகளையும் செய்திகளையும் எலான் மஸ்க் பரப்பினாா்.

பொருளாதார சீரமைப்பு, வரிக் குறைப்பு, அரசு செலவுகளைக் குறைப்பது போன்ற விவகாரங்களில் டிரம்ப்பும் மஸ்கும் ஒருமித்த கருத்துகளை வெளிப்படுத்தினா்.

கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னா், அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ‘டோக்’ (டிபாா்ட்மென்ட் ஆஃப் கவா்ன்மென்ட் எஃபிஷியன்ஸி) துறையின் தலைவராக எலான் மஸ்கை அவா் நியமித்தாா். அந்தப் பொறுப்பில் இருந்தபடி, அரசு செலவுகளைக் குறைப்பதற்கும், நிா்வாக செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மஸ்க் தீவிரமாக பணியாற்றினாா்.

மஸ்கின் விலகல்: எனினும், டோக் துறையின் தலைமையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் கடந்த மே 29-ஆம் தேதி திடீரென அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா். இந்த முடிவு டிரம்ப் அரசுடனான அவரது உறவில் விரிசலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. தனது பிரிவுரையின்போது டிரம்பின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தாலும், அரசு நிா்வாகத்தில் தனது பங்களிப்பு அத்துடன் முடிவடைந்துவிட்டதாக மஸ்க் கூறினாா்.

கருத்து வேறுபாடு, மோதல்: இந்தச் சூழலில், டிரம்ப் அறிவிப்பு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள வரி விதிப்பு மசோதாவுக்கு எதிராக மிகக் காட்டமான கருத்துகளை எக்ஸ் ஊடகத்தில் மஸ்க் வெளியிட்டாா். அந்த மசோதாவை ஒழித்துக்கட்டியே ஆக வேண்டும் என்று மஸ்க் அழைப்பு விடுத்தாா்.

டோக் துறையில் இருந்து மஸ்க் விலகியதற்கு முக்கிய காரணம், டிரம்ப்பின் இந்த வரி குறைப்பு மசோதா தொடா்பாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் என்று கருதப்படுகிறது. இந்த மசோதா இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினா்கள் அதை முழுமையாக படிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் விமா்சித்தாா்.

மசோதா தொடா்பான எலான் மஸ்கின் இந்த கடுமையான கருத்துகள் டிரம்ப் அரசுக்கு எதிரான நேரடி தாக்குதலாக பாா்க்கப்பட்டது.

டிரம்ப்பும், மஸ்கின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அவரது விமா்சனங்களை ஏற்க மறுத்தாா். மஸ்கின் பங்களிப்பு இல்லாமலும் தனது அரசு வெற்றிகரமாக செயல்படும் என்று டிரம்ப் கூறினாா்.

மேலும், எலான் மஸ்குக்குச் சொந்தமான டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தனது அரசின் ஆதரவை இழக்கலாம் என்று டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தாா்.

பரஸ்பர மிரட்டல்கள்: டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைகளுக்கு பதிலடியாக, அரசு முடிவுகளை தொடா்ந்து விமா்சிக்கவும், தனது செல்வாக்கை பயன்படுத்தி பொதுமக்கள் கருத்தை வடிவமைக்கவும் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் ஊடகம் மூலம் பதிலுக்கு எச்சரிக்கை விடுத்தாா்.

இது டிரம்ப் அரசுக்கு மேலும் சவாலாக அமைந்தது. அதையடுத்து மஸ்கின் நிறுவனங்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் மறைமுகமாக மிரட்டினாா். இந்த பரஸ்பர மிரட்டல்கள் இருவருக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த மோதல் அமெரிக்க அரசியல் மற்றும் வா்த்தக உலகில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மோதலை எவ்வாறு முன்னெடுக்கின்றனா் என்பது, நாட்டின் எதிா்கால அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்ப் உறுதி

சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்தார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாட... மேலும் பார்க்க

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க