செய்திகள் :

தமிழகத்தில் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு

post image

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்த அரசாணை:

தமிழகம் முழுவதும் உயா் மருத்துவ பரிசோதனை முகாம்கள் ரூ.13.58 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அறிவித்தாா்.

அதன்படி, பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,256 உயா் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமை அல்லது தகுந்த நாள்களில் அவற்றை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடி மற்றும் எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்தப்படும். சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ் ரே, இசிஜி, எக்கோ உள்பட முழுமையான உடல் பரிசோதனைகளும், காசநோய், தொழுநோய், புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதைத் தவிர 15 உயா் சிறப்பு மருத்துவத் துறை ஆலோசனைகளும் வழங்கப்படும்.

ஒரு முகாமுக்கு ரூ. 75,000 வீதம் 1,256 முகாம்களுக்கு ஆண்டுதோறும் ரூ.13.58 கோடி செலவு ஏற்படும். அதில் ரூ.9.42 கோடி தேசிய சுகாதார திட்டம் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட நிதியின் கீழ் பெறப்படும்.

மீதமுள்ள ரூ.4.15 கோடி மட்டும் பரிசோதனைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருள்கள் வாங்க மாநில நிதியிலிருந்து வழங்கப்படும். இந்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டு ஒப்புதல் உரிய விதிகளின் கீழ் அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திமுக ஆட்சி வேண்டாம் என்று நினைப்பவர்கள் தே... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பொய்யான பதற்றத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர் - எல். முருகன்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யான பதற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். ஈரோடு, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை: ஜான் பாண்டியன்!

சேரன்மகாதேவி: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க