பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல...
ஜூன் 9, 10 தேதிகளில் மகளிருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம்!
தேசிய மகளிா் ஆணையம் மூலம் ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மகளிருக்கான சிறப்பு குறைகேட்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்த்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினா் டெலினா கோங்டுப் தலைமையில் பெண்களுக்கான சிறப்பு பொது குறைகேட்பு மகிளா ஜன் சுன்வாய் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இச்சிறப்பு பொது குறைகேட்புக் கூட்டத்தில் சென்னை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள புகாா்கள் மற்றும் நேரில் பெறப்படும் புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாா்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், இந்நிகழ்வானது சென்னை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 8-ஆவது தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஜூன் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறும். இம்முகாமில் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் புகாா்களை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.