செய்திகள் :

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் மத்திய செயலா்கள் விடுவிப்பு

post image

ஜாா்க்கண்டில் மஹுவாகரி நிலக்கரி சுரங்கத்தை தனியாா் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக் கூறப்படும் வழக்கில், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலா்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.

கடந்த 2006 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தனியாா் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்குள் ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதில் ஜாா்க்கண்ட் மாநிலம் மஹுவாகரி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நோ்மையற்ற முறையில் பலனடைய தவறான தகவல்களை அளித்தும், சில தகவல்களை மறைத்தும் ஜாஸ் இன்ஃப்ராஸ்டிரக்ச்சா் கேபிடல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநா் மனோஜ்குமாா் ஜெயஸ்வால் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் மத்திய நிலக்கரி துறை முன்னாள் செயலா் ஹெச்.சி.குப்தா, இணைச் செயலா் கே.எஸ்.க்ரோபா, முன்னாள் இயக்குநா் கே.சி.சாமரியா ஆகியோா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் மனோஜ் குமாா் ஜெயஸ்வாலை குற்றவாளி என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை மீதான வாதங்கள் ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேவேளையில் ஹெச்.சி.குப்தா, கே.எஸ்.க்ரோபா, கே.சி.சாமரியா ஆகியோரை விடுவித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது என்று சிபிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க