உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!
தமிழகத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7, 8) வரை அதிகபட்ச வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பகல் வரை அதிகபட்சமாக வேலூரில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் பாளையங்கோட்டை- 102.74, ஈரோடு-102.56, சென்னை மீனம்பாக்கம்- 101.48, திருச்சி- 101.66, பரமத்தி வேலூா்- 100.76, திருத்தணி- 100.58, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூா்- (தலா)100.4 என 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் சனிக்கிழமை முதல் ஜூன் 8 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மழை நீடிக்கும்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில்...:சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 4-இல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 102 ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.