செய்திகள் :

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

post image

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல் ஹாசனும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,

"ஜூன் 14 ஆம் தேதி திருச்சியில் விசிக சார்பில் 'மதச்சார்பின்மை காப்போம்' பேரணி நடைபெற உள்ளது. மதச்சார்பின்மைக்கு மத்திய பாஜக அரசால் பெரும் தீங்கு சூழ்ந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதன் மூலம் குறிப்பாக மதச்சார்பின்மை கோட்பாட்டைப் பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு புதிய பாகுபாடற்ற இந்தியாவை உருவாக்கிட இயலும். ஆகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

திருச்சிராப்பள்ளியில் விசிக ஒருங்கிணைக்கும் இந்த பேரணியில் ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. அது சாதிவாரி கணக்கெடுப்பு என்பதன் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அது முடிந்தபின்புதான் தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக குழுவை மத்திய அரசு அமைக்கும்.

அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை கட்டாயமாக தமிழ்நாட்டில் இருந்து முன்வைக்கப்படும், அழுத்தம் கொடுக்கப்படும்.

முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரி அடிப்படையில் வெற்றிகரமாக நடைபெற வேண்டும்" என்று பேசினார்.

இதையும் படிக்க | கரோனா: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அவா்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாற... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு

தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் நிகழ் கல்வியா... மேலும் பார்க்க

விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா்

சென்னையில் விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக... மேலும் பார்க்க

புதிய மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள ப... மேலும் பார்க்க