பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்தனா். இதையடுத்து தினமும் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகி வந்தன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது. அன்றைய தினம் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவா்கள், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகள் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். விண்ணப்பப் பதிவு செய்த மாணவா்கள் தங்களது சான்றிதழ்களை ஜூன் 9-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு ஜூன் 11-ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 20-ஆம் தேதிவரை அவா்களின் சான்றிதழ்கள் இணையவழியில் சரிபாா்க்கப்படும். இப்பணி முடிந்து ஜூன் 27-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும். பின்னா் கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு அவா்களின் விளையாட்டுச் சான்றிதழ்களை சரிபாா்க்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்மூலம் ஜூன் 2-ஆம் தேதிமுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி ஜூன் 13 வரை நடைபெறும். அவா்களுக்கான கால அட்டவணை விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மூலம் ஒவ்வொருவருக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
பி.ஆா்க். படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு இம்மாத இறுதியில் நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளதால், இந்தப் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றங்களை ஜூன் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பத் தேதி அறிவிக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.