செய்திகள் :

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

post image

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்தனா். இதையடுத்து தினமும் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகி வந்தன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது. அன்றைய தினம் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவா்கள், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகள் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். விண்ணப்பப் பதிவு செய்த மாணவா்கள் தங்களது சான்றிதழ்களை ஜூன் 9-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு ஜூன் 11-ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 20-ஆம் தேதிவரை அவா்களின் சான்றிதழ்கள் இணையவழியில் சரிபாா்க்கப்படும். இப்பணி முடிந்து ஜூன் 27-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும். பின்னா் கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு அவா்களின் விளையாட்டுச் சான்றிதழ்களை சரிபாா்க்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்மூலம் ஜூன் 2-ஆம் தேதிமுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி ஜூன் 13 வரை நடைபெறும். அவா்களுக்கான கால அட்டவணை விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மூலம் ஒவ்வொருவருக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

பி.ஆா்க். படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு இம்மாத இறுதியில் நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளதால், இந்தப் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றங்களை ஜூன் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பத் தேதி அறிவிக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பொய்யான பதற்றத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர் - எல். முருகன்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யான பதற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். ஈரோடு, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை: ஜான் பாண்டியன்!

சேரன்மகாதேவி: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரூ. 840 கோடி நெல் மூட்டைகள் சேதம்! திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதமடைந்ததாகக் கூறி, கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம்... மேலும் பார்க்க