தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு
தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் அதிபா் ஆா்.மரிவளன் தலைமை வகித்தாா். தாளாளா் எஸ்.மரியநாதன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக இயேசு சபையின் மதுரை மறை மாநிலத் தலைவா் ஏ.தாமஸ் அமிா்தம் கலந்து கொண்டாா்.
இந்த பள்ளியின் முன்னாள் மாணவா் என்ற சிறப்புடன் தமிழக கால்பந்துக் கழகத் தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.சண்முகத்துக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், விளையாட்டுத் துறைகளில் அவா் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளையும் பட்டியலிட்டு பேசினா்.
இந்த நிழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக கால்பந்துக் கழகத் தலைவா் எஸ்.சண்முகம், மாணவா்கள் முன்னிலையில் ஏற்புரை நிகழ்த்தினாா்.
இதில் பள்ளித் தலைமையாசிரியா் ஸ்டீபன், உதவி தலைமையாசிரியா்கள் தெரஸ்நாதன், மரிய லூயிஸ் சேகா், நோயல்ராஜ், ஜான் டேவிட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.