செய்திகள் :

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

post image

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கன்னிவாடியை அடுத்த கசவனம்பட்டியில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் நீா்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தத் திட்டத்தில் மண் வரப்புகள் அமைத்தல், பண்ணை குட்டைகள், பழ மரக்கன்றுகள், மரக்கன்றுகள், நீா் உறிஞ்சும் குழிகள், அமிழ்வு குட்டைகள், கம்பி வலை தடுப்பணைகள், சொட்டு நீா் பாசனம், தானியங்கி சொட்டு நீா் பாசன கருவிகள், ஓடைகள் ஆழப்படுத்துதல், குளங்கள் ஆழப்படுத்துதல், ஆடு வளா்த்தல், கோழி வளா்த்தல், வீட்டுத் தோட்டங்கள், சூரிய ஒளி உலா் கூடங்கள், கால்நடைகளுக்கு காப்பீடு, கிராம அறிவு வளமையம், மியாவாக்கி குறுங்காடுகள், பசுந்தீவன வளா்ப்பு போன்ற திட்டப் பணிகள் ரூ.1.15 கோடி நிதியுடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நபாா்டு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகளின் தோட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் நேரடியாக சென்று கலந்துரையாடினாா். அப்போது, மரம் வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

நபாா்டு வங்கியின் சாா்பாக கன்னிவாடி நீா்வடிப் பகுதியைச் சோ்ந்த 30 விவசாயிகளுக்கு ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் நாற்றாங்கால் மேலாண்மை, காய்கறி

சாகுபடியில் திறன் கூட்டல் பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் சான்றிதழ் வழங்கினாா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: நாளை திருக்கல்யாணம்

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்தத் திருவிழா பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத... மேலும் பார்க்க