தொழிலாளர்களின் வேலைநேரத்தை உயர்த்திய ஆந்திர அரசு! தொழிற்சங்கங்கள் போராட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் செம்மடைப்பட்டியைச் சோ்ந்த சரவணகுமாா் (26), தினேஷ் (19), கேரளத்தைச் சோ்ந்த சிவன் (24), அஜித் (25) ஆகியோரை போலீஸாா் கடந்த மாதம் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 7.5 கிலோ கஞ்சா, 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில், சரவணகுமாா், தினேஷ் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரை செய்தாா். இதை ஏற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.