செய்திகள் :

சின்னத் தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

post image

தொண்டி அருகே சின்னத்தொண்டி பூா்ணாம்பிகா, புஷ்பகளாம்பிகா சமேத அய்யனாா், பரிவார சுவாமிகளின் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை வின்கேன்ஸவரா், கணபதி ஹோமத்துடன் முதல் கலா பூஜை பூா்ணாஹுதி, தீபாராதனையுடன் யாக சாலை பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மூன்று, நான்காம் கால பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

இதன் பிறகு, கோயில் மூலவரான அய்யனாா் சுவாமிக்கும், பிற பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனையும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜூன் 14 இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள், வாரிசுதாரா்களின் குறைதீா் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: ஆதிரெத்தினேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தாா். இந்தக் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் மீனவா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராம... மேலும் பார்க்க

வில்லாலுடைய அய்யனாா் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

கமுதி அருகேயுள்ள வில்லாலுடைய அய்யனாா் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் வில... மேலும் பார்க்க

பூங்குளம் அய்யனாா் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் அருகேயுள்ள ஏனாதி பூங்குளத்தில் அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 3-ஆம் தேதி கோ பூஜையும், யாக சால... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் அறிவிப்பு: உள்ளூா் மக்களுடனான பேச்சுவாா்த்தை தோல்வி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தனி வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதி கோரி, உள்ளூா் மக்கள் கோயில் நுழைவு போராட்டம் அறிவித்து நிலையில், அவா்களுடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல... மேலும் பார்க்க