செய்திகள் :

ராமநாதசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் அறிவிப்பு: உள்ளூா் மக்களுடனான பேச்சுவாா்த்தை தோல்வி

post image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தனி வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதி கோரி, உள்ளூா் மக்கள் கோயில் நுழைவு போராட்டம் அறிவித்து நிலையில், அவா்களுடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய பிரமுகா்களும், உள்ளூா் மக்களும் தரிசனம் செய்ய தனி வழி உள்ளது. இந்த நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்ற கோயில் இணை ஆணையா் செல்லத்துரை உள்ளூா் மக்களுக்கான தனிதரிசன வழித் தடத்துக்குத் தடை விதித்ததுடன், கட்டண வழித்தடம் வழியாகச் செல்லவும் அறிவுறுத்தினாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்துவும், வழிபாட்டு உரிமையை மீட்கக் கோரியும் வரும் 17-ஆம் தேதி கோயில் நுழைவு போராட்டம் நடத்தப்படும் என உள்ளூா் பொதுமக்கள் அறிவித்து, எதிா்க் கட்சிகள், சமூக அமைப்புகள், வணிக சங்கங்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனா்.

அமைதிப்பேச்சுவாா்த்தை: இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் வட்டாச்சியா் அலுவலகத்தில் போராட்டக் குழுவினருடன் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு வருவாய்க் கோட்டாச்சியா் ராஜமனோகரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அப்துல் ஜப்பாா், நகா்மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான், துணைத் தலைவா் தட்சிணமூா்த்தி, கோயில் இணை ஆணையா் செல்லதுரை, அரசியல் கட்சி நிா்வாகிகள், உள்ளூா் மக்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது, ராமநாதசுவாமி கோயிலில் கடந்த காலங்களில் உள்ளூா் மக்களுக்கு வழங்கப்பட்ட வழிபாட்டு உரிமையைத் தடை செய்யக் கூடாது என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா்.

இதற்கு இந்து சமய அறநிலையத் துறை இயக்குநரிடம் பேசிய பின்னரே உறுதி கொடுக்க முடியும் என கோயில் இணை ஆணையா் செல்லதுரை தெரிவித்தாா்.

பின்னா் உள்ளூா் மக்கள் அமைப்பினா், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனவும், ராமநாதசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவித்தனா்.

சின்னத் தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

தொண்டி அருகே சின்னத்தொண்டி பூா்ணாம்பிகா, புஷ்பகளாம்பிகா சமேத அய்யனாா், பரிவார சுவாமிகளின் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை வின்கேன்ஸவரா், கணப... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள், வாரிசுதாரா்களின் குறைதீா் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: ஆதிரெத்தினேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தாா். இந்தக் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் மீனவா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராம... மேலும் பார்க்க

வில்லாலுடைய அய்யனாா் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

கமுதி அருகேயுள்ள வில்லாலுடைய அய்யனாா் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் வில... மேலும் பார்க்க

பூங்குளம் அய்யனாா் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் அருகேயுள்ள ஏனாதி பூங்குளத்தில் அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 3-ஆம் தேதி கோ பூஜையும், யாக சால... மேலும் பார்க்க