ஜூன் 13-இல் மீனவா்கள் குறைதீா் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மீனவா்கள் குறைதீா் கூட்டம் வருகிற 13- ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.
மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து மீனவா்களும் கலந்து கொண்டு, தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.