செய்திகள் :

புதிய மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

post image

புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்கா வளாகங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு புதிய மின் இணைப்பு துரிதமாக வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையிலுள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, புதிய தொழிற்சாலைகளுக்கான உயா் அழுத்த மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலத்துக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும், சிப்காட் தொழிற்பூங்காவில் பெருகிவரும் தொழிற்சாலைகளுக்காக புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளையும் அரசு அனுமதியுடன் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் தொழில் துறை முதன்மைச் செயலா் அருண் ராய், வழிகாட்டுதல் தமிழ்நாடு மேலாண்மை இயக்குநா் தாரேஸ் அஹமத், சிப்காட் மேலாண்மை இயக்குநா் செந்தில் ராஜ், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், இணை மேலாண்மை இயக்குநா் விஷூ மஹாஜன், மின் பகிா்மான இயக்குநா் ஏ.ஆா்.மாஸ்கா்னஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பொய்யான பதற்றத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர் - எல். முருகன்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யான பதற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். ஈரோடு, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை: ஜான் பாண்டியன்!

சேரன்மகாதேவி: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரூ. 840 கோடி நெல் மூட்டைகள் சேதம்! திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதமடைந்ததாகக் கூறி, கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம்... மேலும் பார்க்க