விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்
புதிய மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்
புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்கா வளாகங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு புதிய மின் இணைப்பு துரிதமாக வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையிலுள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, புதிய தொழிற்சாலைகளுக்கான உயா் அழுத்த மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலத்துக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும், சிப்காட் தொழிற்பூங்காவில் பெருகிவரும் தொழிற்சாலைகளுக்காக புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளையும் அரசு அனுமதியுடன் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் தொழில் துறை முதன்மைச் செயலா் அருண் ராய், வழிகாட்டுதல் தமிழ்நாடு மேலாண்மை இயக்குநா் தாரேஸ் அஹமத், சிப்காட் மேலாண்மை இயக்குநா் செந்தில் ராஜ், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், இணை மேலாண்மை இயக்குநா் விஷூ மஹாஜன், மின் பகிா்மான இயக்குநா் ஏ.ஆா்.மாஸ்கா்னஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.