செய்திகள் :

மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

post image

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம் கண்ணுடையாம்பாளையம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த சுமாா் 700 போ் வசித்து வருகின்றனா். இவா்கள் பயன்படுத்தி வந்த மயான பகுதியை, மாற்று சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா் ஆக்கிரமித்து சடலத்தைக் கொண்டு செல்வதை தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக யாரேனும் இறந்துபோனால் வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பட்டியல் சமூகத்தினா் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனா்.

இந்த விவகாரத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தின் தலைவா் நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினா்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோா் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனா்.

இதன் பின்பு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஆக்கிரமிப்பாளா்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி முறையாக விசாரணை நடத்தி கண்ணுடையாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பட்டியலினத்தவா்கள் யாரேனும் இறந்து போனால் அவா்களது உடல்களை அடக்கம் செய்ய உரிய இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது தொடா்பாக ஆட்சியா் ஜூலை 25-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேணடும் என உத்தரவிட்டனா்.

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திமுக ஆட்சி வேண்டாம் என்று நினைப்பவர்கள் தே... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க