செய்திகள் :

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

post image

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி எக்ஸில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மாநிலத்தை பல்வேறு துறைகளில் மாற்றம் செய்ய அயராது முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளார்.

கடவுள் அவருக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராத்நாத் சிங்,

மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றதற்காக முதல்வரைப் பாராட்டினார். பொது நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அவர் தொடர்ந்து அயராது பாடுபடுகிறார். அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் ஆதித்யநாத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் இருக்க வாழ்த்துகிறேன் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

துணை முதல்வர் பிரஜேஷ் பதக், புஷ்கர் சிங் தாமி, தேவேந்திர ஃபட்னவிஸ், பஜன்லால் சர்மா உள்ளிட்ட பல முதல்வர்களும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க

ஆர்சிபி பேரணி விவகாரம்! அரசியல் செயலாளர் விடுவிப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் விடுவிக்கப்பட்டார்.பெங்களூரு ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம், நாடு முழ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை

மத்தியப் பிரதேசத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர் விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக... மேலும் பார்க்க

வாடிக்கையாளர்களின் ரூ. 4.58 கோடி கையாடல்! முதலீடு செய்த வங்கி மேலாளர் கைது

ராஜஸ்தானில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்த வங்கி மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் தனியார் வங்கியின் வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்... மேலும் பார்க்க