செய்திகள் :

கொள்ளை முயற்சியில் முதியவர் சுட்டுக் கொலை; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - நடந்தது என்ன?

post image

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50).

கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்குமார் வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் திடீரென்று துப்பாக்கியைக் காட்டி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

இதை பார்த்த கருப்பசாமி அவர்களைத் தடுக்க முயன்றார். அதற்குள் துப்பாக்கியால் அவரை சுட்டத்தில் நெஞ்சில் குண்டு பாய்ந்து கருப்பசாமி சரிந்தார். தடுக்கச் சென்ற சிவக்குமார், சிவகாமி ஆகியோருக்கும் கையில் துப்பாக்கியால் சுட்டதில் காயம் ஏற்பட்டது. அவர்கள் சத்தம் போட கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பினார்கள்.

சையத் சலீம்

இதில், கருப்பசாமி பரிதாபமாக இறந்தார். தாய், மகன் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் அப்போது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மிலிட்டரி காலனியை சேர்ந்த சலீம் (எ) சையத் சலீம்(45) என்பவரை கைது செய்தனர். இவர் முன்னாள் ராணுவ வீரர்.

விசாரணையில் சலீம், ராணுவத்தில் பணியாற்றியபோது தனது நண்பர்களாக இருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அஷ்வின்குமார், மேற்கு வங்கத்தை சேர்ந்த நாராயணதாஸ் ஆகியோருடன் சேர்ந்து, தொழிலதிபர் சிவக்குமார் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்தபோது கொள்ளை முயற்சி தோல்வியடைந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டு தப்பியது தெரியவந்தது. இவர்களில் அஷ்வின்குமார், நாராணயதாஸ் தலைமறைவானார்கள்.

நீதிமன்றம்

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதம், ஆயுதம் பயன்படுத்தி குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், 2 பேரை கொலை முயற்சி செய்த குற்றத்துக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், கொலை செய்ய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் ஆகியவற்றை ஏக காலத்தில் சலீம் அனுபவிக்க நீதிபதி பத்மா தீர்ப்பளித்தார்.

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க