செய்திகள் :

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

post image

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார்.

அவர் வங்கியில் சென்று விசாரித்தபோது அவரது பணம் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் இது குறித்து வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

வங்கியில் பணியாற்றும் சாக்‌ஷி குப்தா வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டெபாசிட் தொகையைக் கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது.

மோசடி
மோசடி

அவர் மொத்தம் 41 வாடிக்கையாளர்களின் 110 டெபாசிட்களைக் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கையாடல் செய்த ரூ.4.58 கோடியை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''2020-23ம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்திருந்த டெபாசிட் தொகையைக் கையாடல் செய்துள்ளார்.

அவர் பணத்தை எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்திருந்த போன் நம்பரை மாற்றி இருக்கிறார். தனது உறவினர்களின் நம்பரைக் கொண்டு மாற்றி ஒ.டி.பி வாடிக்கையாளர்களுக்குச் செல்லாமல் பார்த்துக்கொண்டார்.

அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணம் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்தது. இதனால் அவரால் வங்கியில் எடுத்த பணத்தை அவரால் திரும்பச் செலுத்த முடியவில்லை.

வங்கி அதிகாரி சாக்‌ஷி குப்தாவின் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்'' என்றார்.

இந்த மோசடியால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை வங்கி நிர்வாகம் சரி செய்து கொடுக்கும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி நடந்த வங்கியில் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வந்திருந்தார்.

மோசடி
மோசடி

அவர் இது குறித்துக் கூறுகையில், ''சாக்‌ஷி குப்தா 4 கோடியை மோசடி செய்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அதனால் எனது பணம் பத்திரமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வங்கிக்கு வந்தேன்.

வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக வங்கியில் வைக்கிறோம். ஆனால் வங்கியில் இது போன்று நடந்தால் எங்குக் கொண்டுபோய் வைப்பது" என்று கேள்வி எழுப்பினார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க