Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?
ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார்.
அவர் வங்கியில் சென்று விசாரித்தபோது அவரது பணம் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் இது குறித்து வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
வங்கியில் பணியாற்றும் சாக்ஷி குப்தா வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டெபாசிட் தொகையைக் கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது.

அவர் மொத்தம் 41 வாடிக்கையாளர்களின் 110 டெபாசிட்களைக் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கையாடல் செய்த ரூ.4.58 கோடியை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''2020-23ம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்திருந்த டெபாசிட் தொகையைக் கையாடல் செய்துள்ளார்.
அவர் பணத்தை எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்திருந்த போன் நம்பரை மாற்றி இருக்கிறார். தனது உறவினர்களின் நம்பரைக் கொண்டு மாற்றி ஒ.டி.பி வாடிக்கையாளர்களுக்குச் செல்லாமல் பார்த்துக்கொண்டார்.
அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணம் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்தது. இதனால் அவரால் வங்கியில் எடுத்த பணத்தை அவரால் திரும்பச் செலுத்த முடியவில்லை.
வங்கி அதிகாரி சாக்ஷி குப்தாவின் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்'' என்றார்.
இந்த மோசடியால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை வங்கி நிர்வாகம் சரி செய்து கொடுக்கும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி நடந்த வங்கியில் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வந்திருந்தார்.

அவர் இது குறித்துக் கூறுகையில், ''சாக்ஷி குப்தா 4 கோடியை மோசடி செய்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அதனால் எனது பணம் பத்திரமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வங்கிக்கு வந்தேன்.
வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக வங்கியில் வைக்கிறோம். ஆனால் வங்கியில் இது போன்று நடந்தால் எங்குக் கொண்டுபோய் வைப்பது" என்று கேள்வி எழுப்பினார்.