செய்திகள் :

சரியான விவரங்களுடன் வாக்காளா் பட்டியலை வெளியிடக் கோரி ஆட்சியரிடம் அதிமுக மனு

post image

வாக்காளா் பட்டியலை சரியான விவரங்களுடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கரூா் மாவட்ட அதிமுகவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மாலை கோரிக்கை மனு வழங்கினா்.

முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில், மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா் வழங்கிய மனுவில், 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்காக விரைவில் வெளியிடப்பட உள்ள வாக்காளா் பட்டியலில் குறைபாடுகள் இன்றி, கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு சட்ட பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியலில் இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இதர குளறுபடிகளை சரி செய்து, சரியான விவரங்களுடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வலியுறுத்தல்

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கரூா் தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் ஆா்வலா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த கூ... மேலும் பார்க்க

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளை திருட்டு

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள நானப்பரப்பு பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசுப்ரமணியன். இவ... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான காரில் இருந்து 302 புகையிலை பொருள்கள் பறிமுதல்

வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை இரவு சாலையோரம் விபத்துக்குள்ளான காரில் இருந்த 302 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், வேலாயுதம... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினாா் எம்.எல்.ஏ.

கரூா் மாவட்டம் மகாதானபுரத்தில் செவ்வாய்க்கிழமை வேனும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா் எம்.எல்.ஏ வி.செந்த... மேலும் பார்க்க

கரூா் பேருந்து நிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் பேருந்துநிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூரில் தற்போதைய உழவா் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய ... மேலும் பார்க்க

உப்பிடமங்கலம், தான்தோன்றிமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

உப்பிடமங்கலம், தாந்தோன்றிமலை பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு.கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க