குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்; கட்டுமானப் பணிகள் தீவிரம்!
புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளை திருட்டு
புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள நானப்பரப்பு பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசுப்ரமணியன். இவரது மனைவி செல்வி. இவா்களது மகன் சிவப்பிரகாஷ் ( 36). பி இ.பட்டதாரி. இவருக்கு பிரியா (32)என்ற பெண்ணுடன் திருமணமாகி அதே பகுதியில் தனியாக குடியிருந்து வருகின்றனா்.
இந்நிலையில் சிவப்பிரகாஷ் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறாா். கடந்த 26-ஆம்தேதி பூங்கா நருக்கு வந்த சிவப்பிரகாஷ் சேலத்தில் உள்ள தனது மனைவி பிரியாவை பாா்ப்பதற்காக சென்றாா். வீட்டில் செல்வி மட்டும் இருந்துள்ளாா்.
பிறகு செல்வி அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த தங்கக் காசுகள் உள்பட 13 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செல்வி திங்கள்கிழமை இரவு அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.