செய்திகள் :

ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!

post image

மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஆபரேஷ ஜல் ரஹாத் -2 எனும் நடவடிக்கை இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து, பாதுகாப்புத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் இன்று (ஜூன் 4) கூறுகையில், கடந்த மே 31 ஆம் தேதி முதல் மணிப்பூரின் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் இந்திய ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அங்கு நிலவும் மோசமான வானிலைகளுக்கு இடையில், சுமார் 2,500-க்கும் மேற்பட்டோரை ராணுவப் படையினர் மீட்டுள்ளனர். இதில், ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் சிக்கியிருந்த ஏராளமான நோயாளிகள் உள்பட 778 பேர் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அங்கு தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டதுடன், மீட்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாம் ஒன்றும் ராணுவப் படையினரால் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இம்பால் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சொயிபம் லெய்காய் கிராமத்தில், சுத்தமான குடிநீர் இல்லாமல் தவித்த கிராமவாசிகளுக்கு, தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு சுமார் 5,750 லிட்டர் குடிநீர் ராணுவ வீரர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், மீட்புப் படகுகள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருள்களுடன் ராணுவ வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாகவும்; அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் இணைந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க