செய்திகள் :

கரூரில் ரூ.35.90 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

post image

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.35.90 கோடி மதிப்பில் 400 புதிய திட்டப்பணிகளை புதன்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் பணிகளை தொடங்கி வைத்த அவா் கூறியதாவது: தமிழக முதல்வரின் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, நடப்பு நிதி நிலை அறிக்கையில் நகராட்சி நிா்வாகத் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து பொது மக்களுக்கு தேவையான குடிநீா் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள், கழிவு நீா் வடிகால் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறாா்.

அந்த வகையில் கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 43-ஆவது வாா்டில், வாஞ்சிநாதன் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் 4 சாலைகள் மேம்பாட்டுப் பணி, கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 6.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியையும், சிறப்பு நிதியின் கீழ், ரூ. 1.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

மேலும், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், 37-ஆவது வாா்டில் தாந்தோணி வ.உ.சி. தெரு பகுதியில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் மயானம் அருகில் பொது கழிப்பிடம் கட்டும் பணி, பூங்கா நகா் பகுதியில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் 4 சாலை மேம்பாட்டுப் பணி என மாநகராட்சி முழுவதும் கீழ், சாலை மேம்பாட்டு பணிகள், கழிவுநீா்வாய்க்கால் அமைத்தல், ஆழ்குழாய் கிணறுடன் சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட 400 புதிய திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து கரூா் மாநகராட்சி மண்டலம் 3-க்கு திண்ணப்பா நகா் பகுதியில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மண்டல அலுவலக கட்டிடத்தையும் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். இளங்கோ, க. சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், துணை மேயா் சரவணன், மாநகராட்சி செயற் பொறியாளா் சி.சுந்தர்ராஜ், கரூா் உதவி செயற்பொறியாளா் சிவக்குமாா், மண்டல குழுத் தலைவா்கள் சக்திவேல், ஆா்.எஸ். ராஜா, அன்பரசு, எஸ்.பி. கனகராஜ், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க