செய்திகள் :

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

post image

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் மாறி மாறி பரஸ்பரம் சாடி வருகிறார்கள்.

உக்ரைனில் இருந்து கடத்தி சென்ற குழந்தைகளை ரஷ்யா இன்னும் ஒப்படைக்காததுக் குறித்து சமீபத்தில் ஜெலன்ஸ்கி பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது...

"ரஷ்யா 2 - 3 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், 'போர்க்களத்தில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நீக்கவேண்டும்' என்பது.

ஜெலன்ஸ்கி (உக்ரைன்) - புதின் (ரஷ்யா)
ஜெலன்ஸ்கி (உக்ரைன்) - புதின் (ரஷ்யா)

ரஷ்யர்கள் 'முட்டாள்கள்' என்று நினைக்கிறேன். போர் நிறுத்தத்திற்கான முக்கிய காரணம், உயிரிழப்புகளைத் தடுக்கத் தான். ஆனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள். அதனால், அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலடி தருவதுப்போல, புதின், 'ஜெலன்ஸ்கி மீது எந்த நம்பகத்தன்மையுமே கிடையாது' என்று பேசியுள்ளார்.

இரு நாட்டு போர் நிறுத்தத்தில் மிகவும் முனைப்புடன் இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "சில நேரங்களில் இரண்டு குழந்தைகள் பைத்தியங்கள் போல சண்டைப் போட்டுக்கொள்ளும். இருவருக்கும் பரஸ்பரம் பிடிக்காது. அவர்கள் பார்க்கில் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களை இழுக்க நினைத்தால், முடியாது. சில நேரங்களில், அவர்களை கொஞ்சம் சண்டைப் போட விட்டுவிட வேண்டும். அப்புறம் பிரிக்க வேண்டும்" என்று சமீபத்திய சந்திப்பு ஒன்றில் பேசியுள்ளார்.

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகள... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் ரேஸ்: முந்தப்போவது யார்? - மல்லுக்கட்டும் மாமன், மச்சான்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர மற்ற ஏழு தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இந்த நிலையில், திமுக மேலிடம், தொகுதி வாரியாக எ... மேலும் பார்க்க