Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு நிலவும் மோசமான வானிலைக்கு இடையில் இந்திய விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகிய படைகள் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் இன்று (ஜூன் 5) மீட்கப்பட்டுள்ளனர். இதில், எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் மூலம் 39 பேர் மீட்கப்பட்டு பாக்யோங் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டனர்.
மேலும், 4 பேர் சீட்டா ரக ஹெலிகாப்டர் மூலமாகவும், 20 பேர் மேற்கு வங்கத்திலிருந்து வந்த மற்றொரு எம்.ஐ.17 ஹெலிகாப்டர் மூலமாகவும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிக்கிமில் நிலவும் மோசமான வானிலையால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டென் பகுதியிலிருந்து மீட்கப்பட இன்னும் 64 சுற்றுலாப் பயணிகள் காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்டெனில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது. இதில், 3 ராணுவ வீரர்கள் பலியானதுடன், 6 பேர் மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!