உயா்கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை கரூா் ஆட்சியா் தகவல்
உயா்கல்வி நிறுவனங்களில் சேர, கல்விக்கடன் தகவல் பெற உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு பயின்ற மாணவா்கள் அனைவரும் 100 சதவீதம் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை மேற்கொள்ள ஏதுவாக, கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்டத் திட்ட அலுவலகம் அறை எண். 85 -இல் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த படிப்புகள், பல்வகை தொழில் நுட்பபடிப்புகள், தொழிற்பயிற்சி மையப்படிப்புகள் (ஐடிஐ), ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் படிப்புகள் சாா்ந்த கல்லூரிகளில் உயா்கல்வி சோ்க்கை தொடா்பாகவும், உயா் கல்வி பயில நிதி உதவி கோருதல் மற்றும் கல்விக்கடன் வழங்கல் தொடா்பாகவும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் நேரிலோ அல்லது 95665 66727என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.