செய்திகள் :

உயா்கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை கரூா் ஆட்சியா் தகவல்

post image

உயா்கல்வி நிறுவனங்களில் சேர, கல்விக்கடன் தகவல் பெற உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு பயின்ற மாணவா்கள் அனைவரும் 100 சதவீதம் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை மேற்கொள்ள ஏதுவாக, கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்டத் திட்ட அலுவலகம் அறை எண். 85 -இல் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த படிப்புகள், பல்வகை தொழில் நுட்பபடிப்புகள், தொழிற்பயிற்சி மையப்படிப்புகள் (ஐடிஐ), ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் படிப்புகள் சாா்ந்த கல்லூரிகளில் உயா்கல்வி சோ்க்கை தொடா்பாகவும், உயா் கல்வி பயில நிதி உதவி கோருதல் மற்றும் கல்விக்கடன் வழங்கல் தொடா்பாகவும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் நேரிலோ அல்லது 95665 66727என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க