செய்திகள் :

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சடலம் மாறிய சம்பவம்! பிகார் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி!!

post image

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சடலம் மாற்றிக்கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநில இளைஞரின் சடலத்துக்குப் பதிலாக தமிழக முதியவரின் சடலம் கொடுக்கப்பட்டு, அது பிகாருக்குக் கொண்டு செல்லப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக மருத்துவமனை மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்டிபள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவா் தீராத வயிற்று வலியின் காரணமாக அவதிக்குள்ளாகி வந்த நிலையில், 2 நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அருகில் இருந்தோா் மீட்டு திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி உயிரிழந்தாா்.

திருத்தணி காவல் நிலையத்தில் இருந்து பிரேத பரிசோதனை செய்வதற்கான அனுமதி கடிதம் வாங்கி வருவதற்காக உறவினர்கள் சென்றிருந்தனா். காவல் நிலையத்தில் கடிதம் பெற்றுக்கொண்டு திருவள்ளூா் பிணவறையில் வைக்கப்பட்ட முதியவா் சடலத்தை பெறுவதற்காக உறவினா்கள் வந்தனா். அப்போது, ராஜேந்திரன் சடலத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் சடலத்தை கொடுத்ததால் அதிா்ச்சி அடைந்தனா்.

மேலும் விவசாயக் கூலி தொழிலாளி ராஜேந்திரனுக்கு 60 வயதான நிலையில், 55 வயதில் இருக்கும் வட மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரின் சடலத்தை எடுத்துச் செல்லும்படி கூறியதால் உறவினர்கள் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் அவர்களே பிணவறையை முற்றுகையிட்டு ராஜேந்திரனின் சடலத்தைத் தேடினர்.

மேலும், இதற்கு முன்பு யாா், யாா் சடலம் வெளியே கொடுக்கப்பட்டது என்பது குறித்து அந்த அறையிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போதுதான், முதியவர் ராஜேந்திரன் சடலத்தை வடமாநில இளைஞர் சடலம் எனக் கருதி பிகாருக்கு அனுப்பி வைத்ததாக மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பிகாா் மாநிலம் நாளந்தா மாவட்டத்தைச் சோ்ந்த மனோஜ் மாஞ்சி (55) என்பவா், அவரது உறவினா் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 30-ஆம் தேதி புறப்பட்டு 1-ஆம் தேதி சென்னை வந்துள்ளார். அங்கிருந்து 2-ஆம் தேதி வெங்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிக்கு வந்து சோ்ந்துள்ளாா்.

தொடா்ந்து 2-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சோ்த்த நிலையில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பிகாரில் இருந்து மனோஜ் மாஞ்சியின் உறவினா் அவரது சடலத்தை பெற்றுச் செல்வதற்காக வந்துள்ளார். ஒருவா் மட்டும் வந்து பிரேத பரிசோதனைக்கு பின் தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் மனோஜ் மாஞ்சி உடலுக்குப் பதிலாக ராஜேந்திரன் உடல் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூா் நகர போலீஸாா் பேச்சு நடத்தி பிகாருக்கு கொண்டு சென்ற முதியவரின் சடலம், மீண்டும் கொண்டு வரும்படி தெரிவித்தனா். அதையடுத்து முதியவா் ராஜேந்திரன் சடலத்தை வெள்ளிக்கிழமை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி உறவினர்களை அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட பெண் மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு

தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் நிகழ் கல்வியா... மேலும் பார்க்க

விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா்

சென்னையில் விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக... மேலும் பார்க்க

புதிய மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள ப... மேலும் பார்க்க

பள்ளி மாணவி மீது தாக்குதல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

சென்னை ராயப்பேட்டையில் பள்ளி மாணவி தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் அதிமுக நிா்வாகி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிக்கு, அதே பகுதியைச்சோ்... மேலும் பார்க்க