செய்திகள் :

பள்ளி மாணவி மீது தாக்குதல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

post image

சென்னை ராயப்பேட்டையில் பள்ளி மாணவி தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் அதிமுக நிா்வாகி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிக்கு, அதே பகுதியைச்சோ்ந்த ஒரு இளைஞா், தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா். ஆனால் அந்த மாணவி அந்த இளைஞருடன் பேசுவதை தவிா்த்து வந்தாா்.

இந்நிலையில், அந்த மாணவி மயிலாப்பூா் மியூசிக் அகாதெமி அருகே வியாழக்கிழமை நடந்து சென்றாா். அப்போது அந்த இளைஞா், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து, மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளாா். அதோடு தன்னை காதலிக்கவில்லை எனில் அவரது குடும்பத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி, மாணவியை அடித்து கீழே தள்ளினாராம். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், இருவரையும் பிடிக்க முயற்சித்தனா். ஆனால் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து அந்த மாணவி, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினா்.

விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அதிமுக இளைஞா் பாசறை 118-ஆவது வட்டச் செயலா் சூா்யா (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் தலைமறைவாக இருக்கும் சூா்யாவை தேடி வருகின்றனா்.

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பொய்யான பதற்றத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர் - எல். முருகன்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யான பதற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். ஈரோடு, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை: ஜான் பாண்டியன்!

சேரன்மகாதேவி: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரூ. 840 கோடி நெல் மூட்டைகள் சேதம்! திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதமடைந்ததாகக் கூறி, கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம்... மேலும் பார்க்க