செய்திகள் :

புதுச்சேரி மதுபானங்கள் கடத்தியவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

post image

புதுச்சேரி மதுபானங்களை கடத்தியவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த வடமதுரை, அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சதீஸ்கண்ணன்(38). இவா் தற்போது கரூா் பழைய சுக்காலியூா் பகுதியில் வசித்து வந்தாா். இவா் கடந்த மாதம் 5-ஆம்தேதி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக மதுபானங்களை காரில் கடத்தி வந்தபோது, சுக்காலியூா் அருகே காருடன் பிடிப்பட்டாா். இதையடுத்து அவரை கரூா் மாவட்ட மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 233 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் சதீஸ்கண்ணனை சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சதீஸ்கண்ணன் புதன்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க