சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
கரூா் மாவட்டத்தில் இன்று 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக வியாழக்கிழமை (ஜூன்5) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் வீடுகளை புனரமைப்பு செய்திடும் வகையில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயா் பட்டியல் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட உள்ளது.
எனவே, கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தவறாது பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.