செய்திகள் :

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

post image

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோடைக்காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், ஆன்மிக நகரமான ராமேசுவரத்துக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக மே 2-ஆம் தேதி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்பட்டது.

விழுப்புரத்திலிருந்து காலை 4.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - ராமேசுவரம் விரைவு ரயில் (06105) முற்பகல் 11.40 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் ராமேசுவரம் -விழுப்புரம் விரைவு ரயில் (06106), இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஜூன் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

விழுப்புரம் -ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய ஆதரவில்லாததன் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06105) ஜூன் 13, 14, 16, 17, 20, 21, 23, 24, 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ராமேசுவரத்திலிருந்து விழுப்புரம் வரை செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06106) ஜூன் 9, 10, 13, 14, 16, 17, 20, 21, 23, 24, 27, 28, 30-ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்... மேலும் பார்க்க

ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ப... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமு... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல... மேலும் பார்க்க

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க