கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
அவரின் கருத்தை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பூச்சாண்டி வேலையைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார் என்று கூறினார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்தைக் குறிப்பிட்டு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜகவின் அடிமைபோல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஏதேனும் ஒரு வகையிலாவது, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அதிமுக பேசியிருக்கிறதா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன் என்று கலர் கலராக ரீல் விடுகிறார் அவர். கமலாலயத்தின் கருத்தை, தன்னுடைய கருத்தாக பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.