செய்திகள் :

14 வயது சூர்யவன்ஷிக்கு கார் பரிசு..! யார்தான் ஓட்டுவார்கள்?

post image

ஐபிஎல் தொடரில் காரினை பரிசாகப் பெற்றுள்ள சூர்யவன்ஷிக்கு இன்னும் 18 வயது நிறைவடையாத்தால் அந்தக் காரை யார் ஓட்டுவார்கள் என்ற சிக்கல் எழுந்துள்ளது.

14 வயதான வைபவ் சூர்யன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார்.

7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். அதிவேகம் சதம், அரைசதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் நிறைவு விழாவில் சூப்பர் ஸ்டிரைக்கர் விருது வென்றார். அதற்காக டாடா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பரிசாகப் பெற்றார்.

ஏற்கனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் இவருக்கு பென்ஸ் காரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.

14 வயதாவதால் இந்தக் கார்களை அவர் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விருது விழாவில் ஹர்ஷா போக்லே இதைக் கிண்டல் செய்தார்.

இந்த விருது குறித்து வைபவ் சூர்யவன்ஷி, “நான் முதன்முதலாக எனது அம்மாவுக்குப் பரிசளிக்க போகிறேன்” எனக் கூறினார்.

இந்த சீசனில் முதல் போட்டிக்குப் பிறகு, “எனது அம்மா இரவு 11 மணிக்கு தூங்கி காலையில் 2 மணிக்கு எழுவார். எனது பயிற்சிக்காக உணவு தயாரிக்கவே இந்தமாதிரி கடினமாக எனது தாயார் உழைத்தார்” எனக் கூறியிருந்தார்.

இந்தக் காரை அவரது அம்மாவின் பெயரிலும் பென்ஸ்காரை அவரது பெயரிலும் பதிவு செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இரண்டையுமே அவரால் ஓட்டமுடியாது.

4 ஆண்டுகள் வரை வேறு யாராவதுதான் அவருக்காக ஓட்ட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற... மேலும் பார்க்க