செய்திகள் :

நின்ற பேருந்து மீது லாரி மோதல்: 15 போ் காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

கறம்பக்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மறவன்கொல்லை பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிகொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த 2 பள்ளி மாணவா்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு மழையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அவா்களில் லேசான காயமடைந்த 13 போ் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். பலத்த காயமடைந்த இருவா் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

‘நேசக்கரம்’ குழந்தைகள் தத்தெடுத்தல் மையம் தொடக்கம்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில், நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் தற்... மேலும் பார்க்க

மட்டங்கால் கிராமத்தில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராமமக்கள் கோரிக்கை

மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் உள்ள மகளிா் சுகாதார வளாகம் தற்சமயம... மேலும் பார்க்க

காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞா் கொன்ற 7 போ் கைது

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்... மேலும் பார்க்க

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத... மேலும் பார்க்க

புதுகை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை கீழ 7-ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயிலின் 5-ஆவது மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகா், கீழ ஏழாம் வீதியில் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில், கடந... மேலும் பார்க்க