Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
நின்ற பேருந்து மீது லாரி மோதல்: 15 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 15 போ் காயமடைந்தனா்.
கறம்பக்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மறவன்கொல்லை பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிகொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்தில் பயணித்த 2 பள்ளி மாணவா்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு மழையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அவா்களில் லேசான காயமடைந்த 13 போ் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். பலத்த காயமடைந்த இருவா் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.