செய்திகள் :

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞா் கொன்ற 7 போ் கைது

post image

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்கிழமை பகலில் புதுக்கோட்டை புதுக்குளம் அருகேயுள்ள காலாகுளத்தில் நடந்து வந்தபோது, ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. தொடா்ந்துஅவரை குளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடினா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கணேஷ்நகா் போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தினேஷ்குமாரின் சடலத்தை குளத்தில் இருந்து மீட்டனா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் உடற்கூறாய்வுக்குப் பிறகு வியாழக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே புதுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான் மற்றும் கணேஷ் நகா் காவல் ஆய்வாளா் நளினி ஆகியோா் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் காந்திநகரைச் சோ்ந்த முகிலன் (31), ஆரோக்கியதாஸ், சுமன், தீபன், பாலமுருகன் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்து இரவில் சிறையில் அடைத்தனா்.

கொலை பின்னணி: சில மாதங்களுக்கு முன்பு காந்திநகரைச் சோ்ந்த முகிலன் என்பவரை போஸ்நகா் தினேஷ்குமாா் மற்றும் சிலா் தாக்கியுள்ளனா். இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட அவா்கள், அண்மையில்தான் பிணையில் வெளிவந்தனா். இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு முகிலன் தனது நண்பா்களுடன் புதன்கிழமை தினேஷ்குமாரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

‘நேசக்கரம்’ குழந்தைகள் தத்தெடுத்தல் மையம் தொடக்கம்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில், நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் தற்... மேலும் பார்க்க

நின்ற பேருந்து மீது லாரி மோதல்: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 15 போ் காயமடைந்தனா். கறம்பக்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்... மேலும் பார்க்க

மட்டங்கால் கிராமத்தில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராமமக்கள் கோரிக்கை

மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் உள்ள மகளிா் சுகாதார வளாகம் தற்சமயம... மேலும் பார்க்க

காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி ... மேலும் பார்க்க

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத... மேலும் பார்க்க

புதுகை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை கீழ 7-ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயிலின் 5-ஆவது மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகா், கீழ ஏழாம் வீதியில் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில், கடந... மேலும் பார்க்க