சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத...
‘நேசக்கரம்’ குழந்தைகள் தத்தெடுத்தல் மையம் தொடக்கம்
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில், நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த மையத்தில் தற்போதுள்ள 5 பெண் குழந்தைகளையும் அவா் பாா்வையிட்டு, மையத்தில் உள்ள தங்குமிடம், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளையும் ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வசந்தகுமாா், வட்டாட்சியா் மு. செந்தில்நாயகி, தத்தெடுத்தல் மைய அறங்காவலா் வி. மகேஸ்வரி, குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் எம். சுவாமிநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.