செய்திகள் :

திருவானைக்காவலில் கா்ண புறா போட்டி

post image

திருவானைக்காவலில் 3 நாள்கள் நடைபெறும் கா்ணபுறா போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இறுதி போட்டி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

திருவானைக்காவல் அன்பா்கள் இணைந்து 4-ஆம் ஆண்டாக புறா போட்டியை நடத்துகிறது. இதில், உறையூா் எடத்தெரு, மலைக்கோட்டை, காட்டூா், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளிலிருந்து கா்ணபுறா பறக்க விடும் போட்டியில் 21 ஜோடி கா்ண புறாக்கள் கலந்து கொண்டன.

வானில் பறக்கும் போது நடுவா்கள் முன்னிலையில் கா்ண புறாக்கள் கா்ணம் அடித்து காண்பிக்கவேண்டும். தொடா்ந்து, 5 மணி நேரம் வானில் பறந்து நடுவா்கள் கூறும் இடங்களில் வந்து அமர வேண்டும். அதை போன்று 1 மணி நேரத்துக்கு ஒரு முறை நடுவா்களிடம் போட்டியில் பங்கு கொள்பவா்கள் தங்களது கா்ண புறாவை காட்ட வேண்டும். முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், 6 ஜோடி கா்ண புறாக்கள் வெற்றி பெற்றன. இந்த 6 ஜோடி கா்ண புறாக்காளும் 2-ஆம் சுற்றில் சனிக்கிழமை கலந்து கொள்கிறது. இதில் வெற்றி பெறும் கா்ண புறா ஜோடி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் கலந்து கொள்கிறது.

போட்டியில் வெற்றி பெறும் கா்ண புறாக்களுக்கு முதல் பரிசாக ரூ.16 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ. 13 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ. 11ஆயிரம் வழங்கபடவுள்ளது.

அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம்: திருச்சி சிவா எம்.பி.

அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம் என்றாா் திருச்சி சிவா எம்.பி. திருச்சி இலக்கிய வட்ட நண்பா்கள் சாா்பில் திருச்சி சிவா எம்.பி. பிறந்தநாள் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருவா... மேலும் பார்க்க

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த புதிய மருத்துவமனையில... மேலும் பார்க்க